Thursday, July 12, 2012

வாலிபர்களின் பிடியில் நள்ளிரவில் காம்னா

மும்பை, : தமிழில், ‘இதயத் திருடன், மச்சக்காரன், ‘காசேதான் கடவுளடா’ படங்களில் நடித்தவர் காம்னா ஜெத்மலானி. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துவருகிறார். மும்பையில் வசிக்கும் காம்னா, கடந்த வெள்ளிக்கிழமை அந்தேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் போரிவிலியில் உள்ள தன் வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சில இளைஞர்கள், காரில் பின்தொடர்ந்தனர். கார் ஜன்னல் வழியாக தலையை நீட்டி ஆபாசமாக கிண்டல் செய்தனர். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக தங்களது காரை ஓட்டி வழிமறிக்க பார்த்தனர். இதில் நடுங்கிப்போன காம்னா பலமுறை சாலையோர நடைபாதை மேடையில் காரை மோதினார். ஆனால் நிறுத்தவில்லை. 40 நிமிடம் அவர்கள் துரத்திக்கொண்டே வந்தனர். ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்தார். பிறகு அவர்களின் கார் நம்பரை குறித்துக்கொண்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஈவ் டீசிங் வழக்கில் அவர்களை கைது செய்துள்ளனர்.இதுபற்றி காம்னாவிடம் கேட்டபோது, Ô‘என் வாழ்வில் இப்படியொரு பயத்தை அனுபவித்தது இல்லை. ஆபாசமாக கத்தியபடி அவர்கள் துரத்தி வந்தனர். எனது காரை தடுத்து நிறுத்துவதில் குறியாக இருந்தார்கள். அப்போது எனக்கு ஏற்பட்ட பயத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது’’ என்றார்

No comments:

Post a Comment